சுழன்றடித்து கொடியேற்றும் தமிழிசை: அட இப்படி ஒரு திட்டமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 21, 2022

சுழன்றடித்து கொடியேற்றும் தமிழிசை: அட இப்படி ஒரு திட்டமா?

 சுழன்றடித்து கொடியேற்றும் தமிழிசை: அட இப்படி ஒரு திட்டமா?


குடியரசு தின விழாவை முன்னுட்டு தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களிலும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தேசியக்கொடி ஏற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் 2019ஆம் ஆண்டு தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். இரு மாநில பொறுப்புகளை ஒரு சேர கவனித்து வரும் தமிழிசை இரு மாநிலங்களிலும் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றுவார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
 ஒரு மாநில ஆளுநராக இருக்கும் போது பொறுப்பு ஆளுநராக வேறு மாநிலத்துக்கு நியமிக்கப்படுவது அவ்வப்போது நடைபெறும் வழக்கம் தான். அந்த சமயங்களில் பொறுப்பு ஆளுநராக இருக்கும் மாநிலங்களில் அந்த மாநில முதலமைச்சரை தேசியக் கொடியேற்றச் சொல்லிவிட்டு ஆளுநராக இருக்கும் மாநிலங்களுக்கு செல்வர்.

மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் தமிழ்நாட்டுக்கு பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது நடைபெற்ற குடியரசு தின விழாவின் போது அவர் மகாராஷ்டிரா புறப்பட்டுச் சென்றுவிட அப்போது தமிழ்நாடு முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் தேசிய கொடியேற்றினார்.2014ஆம் ஆண்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக வகித்தார் அந்தமான் ஆளுநர் ஏ.கே.சிங். அப்போது அவர் அந்தமானில் தேசிய கொடியேற்ற, அப்போது புதுச்சேரி முதல்வராக இருந்த ரங்கசாமி தேசியக் கொடி ஏற்றினார்.

இந்த முறை தெலங்கானாவில் தமிழிசை தேசிய கொடியேற்ற, ரங்கசாமி புதுச்சேரியில் தேசிய கொடியேற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரு இடங்களிலும் தமிழிசையே தேசிய கொடியேற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.26ஆம் தேதி புதுச்சேரியில் காலை 7 மணிக்கே குடியரசு தின விழா நிகழ்ச்சி தொடங்கும் நிலையில் 8 மணிக்குள் புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு ஆளுநர் தமிழிசை தெலுங்கானா புறப்பட்டுச் சென்று அங்கும் தேசியக் கொடி ஏற்றுவார் என்று கூறப்படுகிறது. இதற்கான பயணத் திட்டம் தயாராகுவதாக சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad