பறவைக் காய்ச்சல் பரவல்.. தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 4, 2022

பறவைக் காய்ச்சல் பரவல்.. தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு!

பறவைக் காய்ச்சல் பரவல்.. தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு!



தமிழகத்தில் போக்குவரத்து துறை 48,154 கோடி நஷ்டத்தில் இயங்குவதாக, போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மதுரையிலிருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்கள் சந்திபில் பேசியதாவது:
"ஒமைக்ரான் தொற்றை பொருத்த வரையில் அதனுடைய பரவல் அதிகமாக இருந்தாலும் பாதிப்பு கம்மியாகத்தான் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதுகுறித்து முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். அதனால் கொரோனா பற்றி பயப்பட வேண்டிய அவசியமில்லை. தீபாவளி பண்டிகையின் போது, செய்தது போலவே தனித்தனியே ஒவ்வொரு பேருந்து நிலையங்களிலும் பேருந்துகள் விடப்படும். எனவே கூட்ட நெரிசல் இருக்காது. கொரோனா பரவலுக்கு வாய்ப்பு இருக்காது.

பேருந்து பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அவர் அறிவுறுத்தியது போல் பின்பற்ற வேண்டும்.

தேர்தல் வர உள்ளது பொங்கல் பண்டிகை உள்ளது அது மட்டுமின்றி உயர் நீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ள வழக்கு ஒன்று உள்ளது இது எல்லாம் முடிவுக்கு வந்த உடன் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது சென்னை மாநகரில் 2,500 கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. பிறகு ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறும்.


மேலும் போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விகிதாச்சார அடிப்படையில் நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல்வரின் ஆலோசனை கேட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

சம்பள பற்றாக்குறை காரணமாக போக்குவரத்து துறையினர் போராட்டத்தில் போக்குவரத்து துறை ஏற்கனவே 48,154 கோடி நஷ்டத்தில் செல்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் தொழிற்சங்க கூட்டங்கள் மூன்று வருடத்திற்கு முன்பு நடைபெற வேண்டியது, தற்போதுதான் நடைபெற உள்ளது. இது தொழிலாளர்களுக்கான அரசு, அனைவரிடமும் எல்லா கோரிக்கையும் கேட்டுள்ளோம். இதுகுறித்து முதலமைச்சருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி நல்லதொரு தீர்வு கொண்டு வருவோம்”, இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad