பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகளுக்கு இப்படியொரு ஆச்சரியம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 1, 2022

பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகளுக்கு இப்படியொரு ஆச்சரியம்!

பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகளுக்கு இப்படியொரு ஆச்சரியம்!



தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசலின் இன்றைய விலை குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
நமது வாழ்வின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக எரிபொருட்கள் மாறிவிட்டன. அவற்றில் வாகனப் பயன்பாட்டிற்கான பெட்ரோல், டீசல் மிகவும் முக்கியமானது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. அதாவது சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த முறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இந்தப் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சூழலில் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களை கண்டது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிட்டது.

பெட்ரோல், டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவந்தது. சமீபத்தில் 100 ரூபாயை தாண்டி விலை வேகமாக அதிகரித்து வந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்தது. அதன்பிறகு விலை படிப்படியாக உயரத் தொடங்கியது.

இந்நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.101.40ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலையும் எந்தவித மாற்றமும் காணாமல் ரூ.91.43 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ஓரளவு சரிந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து 59வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் காணாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. எண்ணெய் நிறுவனங்கள் கையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இருந்தாலும், மத்திய அரசு நினைத்தால் வரி குறைப்பு மூலம் விலையை குறைக்கலாம்.

அப்படித்தான் தீபாவளி சமீபத்தில் செய்தது. அது அரசு மீதான அதிருப்தியை குறைக்கும் வியூகம் எனக் குற்றம்சாட்டப்பட்டது. தற்போது ஒரு மாதத்திற்கும் மேலாக விலை மாறாமல் இருப்பதால், ஒட்டுமொத்தமாக விலை ஏற்றத்திற்கு வழிவகுத்து விடுமோ என்ற கேள்வியை எழுப்புகிறது. இதற்கிடையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மின்சார வாகனப் பயன்பாட்டை பல்வேறு மாநில அரசுகளும் ஊக்குவித்து வருகின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad