சமந்தா தான் முதலில் விவாகரத்து கேட்டாரா..? தீயாக பரவும் செய்தி: கொதித்த நாகர்ஜுனா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 27, 2022

சமந்தா தான் முதலில் விவாகரத்து கேட்டாரா..? தீயாக பரவும் செய்தி: கொதித்த நாகர்ஜுனா!

சமந்தா தான் முதலில் விவாகரத்து கேட்டாரா..? தீயாக பரவும் செய்தி: கொதித்த நாகர்ஜுனா!


சமந்தா தான் முதலில் விவாகரத்தை விரும்பியதாக நாகர்ஜுனா கூறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தீயாக செய்திகள் பரவி வருகின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம்வந்த இருவரும் அண்மையில் மனம் ஒத்து பிரிவதாக தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். இந்நிலையில் இவர்களின் பிரிவுக்கு சமந்தா தான் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பான செய்திகள் வெளியானது.
கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கு படம் ஒன்றில் இணைந்து நடித்ததன் மூலம், நண்பர்களாக பழக துவங்கிய சமந்தா, நாக சைதன்யா இருவரும் காதலிக்க துவங்கினார்கள். அதன்பின்னர் இவர்களது காதல் விவகாரம் வெளியே வர துவங்கியதும் இரு வீட்டார் சம்மதத்துடன் கோவாவில் மிக பிரமாண்டமாக, கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்களுடைய திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக தங்களின் விவாகரத்தை அறிவித்தனர். அதன்பின்னர் சமந்தா மீண்டும் படங்களில்நடிக்க தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிவு குறித்து முதல் முதலாக நாகார்ஜுனா கருத்து தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. அதில், ‘சமந்தா தான் முதன் முதலில் விவாகரத்து வேண்டும் என்று கேட்டதாகவும். சமந்தா, நாக சைதன்யா ஆகிய இருவருமே நெருக்கமாக தான் இருந்தார்கள் என்றும் அவர்களுக்குள் எப்படி பிரச்சனை வந்தது என்று எனக்கு தெரியவில்லை என்றும் நாகார்ஜுனா கூறியதாக செய்திகள் வெளியானது.
சமந்தாவின் முடிவை நாக சைதன்யா ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் அப்பாவாகிய தன்னைப் பற்றியும், நான் என்ன நினைப்பேன், குடும்பத்தின் நற்பெயர் என்னவாகும் என்பது குறித்தும் அவர் மிகவும் கவலைப்பட்டதாகவும், நான் வருத்தப்படுவேன் என நினைத்து நாக சைதன்யா கவலை அடைந்ததாகவும் நாகார்ஜுனா தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியிருந்தது.
இந்நிலையில் நாகார்ஜூனா, தனது ட்விட்டர் பக்கத்தில், சமந்தா, நாக சைத்தன்யா விவாகரத்து குறித்து எந்த ஒரு பேட்டியும் நான் கொடுக்கவில்லை. நான் கூறியதாக ஊடகங்களிலும், சமூகவலைத்தளத்திலும் பரவும் செய்து முற்றிலும் முட்டாள்தனமானது. வதந்திகளை செய்தியாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என நாகார்ஜூனா பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.






No comments:

Post a Comment

Post Top Ad