பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 9, 2022

பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்?

பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்?


பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் மூன்றாண்டுகளாக நடத்தப்படாமல் உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, 2019ஆம் ஆண்டில் நடைபெற்றது. நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பின்னர், ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து ஏணைய மாவட்டங்களில் ஊராட்சி பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது.

இதையடுத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஒன்பது மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு எப்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்ற கேள்வி பரவலாக எழுந்த நிலையில், மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் கிடுக்கிப்பிடி உத்தரவைத் தொடர்ந்து, விடுபட்ட 9 மாவட்ட ஊராட்சிகளுக்கு அண்மையில் தேர்தல் நடந்தது.

அதன் தொடர்ச்சியாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பே தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.

அதேசமயம், புதிதாக பரவ தொடங்கி இருக்கும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கம் போன்றவற்றால் தேர்தல் தேதி தள்ளி போடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 21 மாநகராட்சிகள் உட்பட நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு பிப்ரவரியில் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு ஜனவரி மூன்றாவது வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, பிப்ரவரி 12,13 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad