தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு: என்னென்ன இயங்கும்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 22, 2022

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு: என்னென்ன இயங்கும்!

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு: என்னென்ன இயங்கும்!



தமிழகத்தில் இன்று முடு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில், அத்தியாவசிய பணிகளுக்கான சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு சுமார் 20,000 பேருக்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் கோயில்களில் அனுமதி இல்லை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் வருகிற 31ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக, கடந்த 2 ஞாயிற்றுக் கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில், இந்த வாரம் ஞாயிறன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியானது. ஆனால், வழக்கம் போல் இந்த வாரமும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

அதேசமயம், அத்தியாவசிய பணிகளுக்கான செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும் என்றும் அறிவிக்ப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள் பால், பத்திரிகை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் பார்சல் சேவை மட்டும் செயல்படும். அவரசத் தேவைகளுக்காக வெளியூர் செல்பவர்கள் வாடைகை வாகனங்களில் பயணம் செய்யலாம்.
காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், டாஸ்மாக் கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் போன்றவைகள் செயல்படாது. அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்தும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் சேவையும் இயங்காது. குறைந்த எண்ணிக்கையில் மின்சார ரயில்கள் மட்டும் இயங்கும்.

இன்று முகூர்த்தநாள் என்பதால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் அதிகம் நடைபெற உள்ளது. ஏற்கனவே சுபநிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று முழு ஊரடங்கு என்பதால் சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் கண்டிப்பாக அழைப்பிதழை கையில் வைத்திருக்க வேண்டும். போலீசார் சோதனையின் போது அதனை காண்பித்து பயணம் செய்து கொள்ளலாம்.
வெளியூரில் இருந்து தொலைத்தூர பேருந்துகள், ரயில்களில் வரும் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் ஆட்டோ, வாடகைக் கார்கள் நிபந்தனைகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவரசத் தேவைகளுக்காக வெளியூர் செல்பவர்கள் வாடைகை வாகனங்களில் பயணம் செய்யலாம்.

வெளியூரில் இருந்து தொலைத்தூர பேருந்துகள், ரயில்களில் வரும் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் ஆட்டோ, வாடகைக் கார்கள் நிபந்தனைகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவரசத் தேவைகளுக்காக வெளியூர் செல்பவர்கள் வாடைகை வாகனங்களில் பயணம் செய்யலாம்.


No comments:

Post a Comment

Post Top Ad