"கடனை கட்டிட்டு சாவுங்க" விவசாயியை மிரட்டிய இந்தியன் வங்கி அதிகாரி ஆடியோ!
விழுப்புரம் அருகே வங்கியில் வாங்கிய கடனை திருப்பிக்கேட்க அழைத்த பெண் அதிகாரி "கடனை கட்டிவிட்டு செத்துப்போங்க" என விவசாயிய மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நாகோத்தமன். மூன்று ஏக்கர பரப்பளவு உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். விவசாயத்திற்காக கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருவெண்ணெய்நல்லூரில் உள்ள இந்தியன் வங்கியில் 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வாராக்கடனாக உள்ள நிலுவைகளை ரிலையன்ஸ் நிதி நிறுவனம் மூலம் செய்ய வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விவசாயி நாகோத்தமன் வாங்கிய வங்கி கடனை ரிலையன்ஸ் நிதி நிறுவன பெண் ஊழியர் ஒருவர் கட்ட வலியுறுத்தி தொலைபேசியில் அழைத்துள்ளார். அப்போது பேசிய அவர், தான் இந்தியன் வங்கியில் இருந்து பேசுவதாகவும், வாங்கிய கடனை உடனடியாக கட்ட வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment