ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்: கூட்டுறவுத் துறை போட்ட உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 28, 2022

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்: கூட்டுறவுத் துறை போட்ட உத்தரவு!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்: கூட்டுறவுத் துறை போட்ட உத்தரவு!


ரேஷன் கடை பணியாளா்களுக்கு அகவிலைப்படி உயா்வை நிறுத்தி வைக்க கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பொதுத் துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கும், அகவிலைப்படி உயர்வினை, அரசு ஆணை எண் 323, நாள்: 17.10.2019 ஆம் ஆண்டின் படி நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன்பின்னர் தற்போது அரசு ஊழியகளுக்கு அகவிலைப்படி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த சூழலில் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் மு.அருணா முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், “தமிழக அரசு ஊழியா்கள், அலுவலா்களுக்கு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படியை உயா்த்தி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடை விற்பனையாளா்கள், கட்டுநா்களுக்கு ஊதிய உயா்வு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, புதிய அடிப்படை ஊதியத்தில் 14 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்படும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்குப் பின்னா் தொடா்ந்து வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயா்வு குறித்து எந்தவித உத்தரவும் அரசாணையில் தெரிவிக்கப்படவில்லை. எனவே, உயா்த்தி வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி குறித்த உத்தரவை அரசிடம் இருந்து பெற்று வழங்கப்படும் வரை, நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயா்வு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும். இதனை ஒவ்வொரு மண்டலத்திலுள்ள சம்பந்தப்பட்ட அனைத்து சங்கங்களுக்கும் தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் விதி 110-ன் கீழ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி அறிவித்து ஆணை எண் 3ல் பிறப்பிக்கப்பட்டுள்ள படி, தற்போது பெற்று வரும் 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அகவிலைப்படி, 1.1.2022 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Post Top Ad