கே.பி.பார்க் கேஸ்.. நாங்கதான் விசாரிப்போம்.. உயர் நீதிமன்றம் தடாலடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 28, 2022

கே.பி.பார்க் கேஸ்.. நாங்கதான் விசாரிப்போம்.. உயர் நீதிமன்றம் தடாலடி!

கே.பி.பார்க் கேஸ்.. நாங்கதான் விசாரிப்போம்.. உயர் நீதிமன்றம் தடாலடி!


கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு வழக்கை நீதிமன்றமே விசாரிக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பை பி.எஸ் டி. நிறுவனம் தரமற்ற முறையில் கட்டியதாக தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்கும் என்றும், சமரச மையம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் 2016-ல் 112 கோடி ரூபாய் செலவில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. இவை தரமற்றவையாக இருப்பதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்ததால், தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஐஐடி குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்தது.

அதில், தரமற்ற வகையில் குடியிருப்பை கட்டிய பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்தை தடை பட்டியலில் சேர்க்கவும், அந்த நிறுவனத்திற்கு இனி அரசு ஒப்பந்தங்கள் வழங்கக் கூடாது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில், பி.எஸ்.டி நிறுவனத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நோட்டீஸ் அனுப்பியது. அதில், ஏன் பி.எஸ்.டி நிறுவனத்தை தடை பட்டியலில் சேர்க்கக் கூடாது என விளக்கம் அளிக்க அந்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது.
.


No comments:

Post a Comment

Post Top Ad