Pandian Stores: கண்ணனை எடுத்தெறிந்து பேசும் மீனா.. குற்றவுணர்ச்சியில் ஐஸ்வர்யா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 7, 2022

Pandian Stores: கண்ணனை எடுத்தெறிந்து பேசும் மீனா.. குற்றவுணர்ச்சியில் ஐஸ்வர்யா!

Pandian Stores: கண்ணனை எடுத்தெறிந்து பேசும் மீனா.. குற்றவுணர்ச்சியில் ஐஸ்வர்யா!



பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.
கிச்சனுக்கு வரும் கதிர் நான் டீ போடுறேன் என சொல்கிறான். அதற்கு தனம் நான் போட்டதே இருக்கு என சொல்லும் போது, முல்லைக்கு நான் போட்டு கொடுக்கனும் அண்ணி என்கிறான். அப்போது அவள் முல்லைக்கு ஏதவாது பிரச்சனையா? கொஞ்ச நாளாவே டல்லா இருக்கா என கேட்கிறாள். அவளிடம் அதெல்லாம் எதுவும் இல்லை அண்ணி. அவ எப்பவும் போல தான் இருக்கா என சொல்லி சமாளிக்கிறான் கதிர்.

அதன்பின்னர் கதிர் டீ போட்டு எடுத்து கொண்டு போகும் போது அவள் குளிக்க போய் விடுகிறாள். அவள் வருவதற்குள் டீ ஆறி விடுகிறது. கதிர் அவளை வெயிட் பண்ண சொல்லி மறுபடியும் டீ போட வருகிறான். அப்போது அங்கிருக்கும் மீனா அவனை கிண்டல் பண்ணுகிறாள். அதனை தொடர்ந்து கதிர் மீனாவுக்கும், முல்லைக்கும் டீ போட்டு கொடுக்கிறான்.

கதிர் டீ போட்டு கொண்டு வரும்போது முல்லை ஆறிய டீயை குடித்து கொண்டிருக்கிறாள். அப்போது அங்கு வரும் தனம், காலைல இருந்து உனக்காக கதிர் இரண்டு டீ போட்டு இருக்கான். நீ இந்த டீயை குடிச்சுட்டு இருக்க என சொல்கிறாள். அதன்பின்னர் முல்லை அவன் போட்ட டீயை வாங்க கொடுக்கிறாள். இதனிடையில் கண்ணனும், ஐஸ்வர்யாவும் ரொம்ப நாள் கழிச்சு காலேஜ் போக கிளம்புகின்றனர்.

அவர்கள் காலேஜ் கிளம்பிய பின் தனம் வண்டியை எடுத்துட்டு போக சொல்கிறாள். அப்போது மீனா உனக்கு வந்த வாழ்வை பாருடா என கிண்டலாக பேசவும், னாங்க பஸ்லயே போயிக்கிறோம் என சொல்கின்றனர். அதன்பின்னர் தனம் அவர்களுக்கு பணம் கொடுத்து போது, உங்களுக்கு என்ன ஓசில சாப்பாடு, பீஸ் எல்லாம் கிடைக்குது. இதுல பாக்கெட் மணி வேற என மீனா பேசுகிறாள். ஜாலியா கல்யாணம் பண்ணிட்டு, இப்போ ஜோடியா காலேஜ் போறீங்க என சொல்கிறாள்.

முல்லை எதுக்காக காலேஜ் போகும் போது இப்படிலாம் பேசுறீங்க என சொல்கிறாள். தனமும் அவர்களை காலேஜ் அனுப்பி வைக்கிறாள். அதன்பின்னர் மீனா, இதுவே நம்ம ரெண்டு பேருக்கும் இந்த மாதிரி நடக்குமா. நம்ம கல்யாணம் பண்ணிட்டு படிக்கணும் சொல்லிருந்தா கேப்பாங்களா என முல்லையிடம் கேட்கிறாள். இதை வாசலில் இருந்து கேட்கும் தனம் சங்ககடப்படுகிறாள்.

இதனிடையில் காலேஜ் போகும் போது ஐஸ்வர்யா, மீனா அக்கா பேசுனதுல எந்த தப்பும் இல்லை. உன்னை படிக்க வைக்குறதுல நியாயம் இருக்கு. என்ன ஏன் படிக்க வைக்கணும். ஏதாவது நம்ம பண்ணனும் என கண்ணனிடம் சொல்கிறாள் ஐஸ்வர்யா. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad