Roja Serial: ரோஜாவை தாக்க வரும் எதிரிகள்...காப்பாத்த தயாராகும் அர்ஜூன்
எத்தனை எதிரிகள் வந்தாலும் அவர்களிடம் இருந்து நான் ரோஜாவைக் காப்பாறறுவேன் என்று சொல்கிறான் அர்ஜூன்.
எத்தனை கஷ்டம் வந்தாலும் என்னோட அர்ஜூன் பார்த்துப்பார் என்பது ரோஜாவின் நம்பிக்கை. அது போலவே எத்தனை எதிரிகள் வந்தாலும் என்னோட இளவரசி ரோஜாவைக் காப்பாற்ற நான் ரெடி என்று சொல்கிறான் அர்ஜூன்.
கணவன் மனைவிக்கு இடையேயான பந்தமும் பாசமும் உயிரோடும் உணர்வோடும் கலந்தது. ரோஜா டிவி சீரியலில் வரும் அர்ஜூன், ரோஜாவும் அப்படித்தான். காதலால் கசிந்துருகும் தம்பதியர். இருவரையும் பிரிக்க வீட்டில் உள்ள யசோதா பாலு தொடங்கி, சாக்ஷி, அனு என எத்தனையோ வில்லிகள் வரிசையாக வந்திருக்கின்றனர்.
மனைவி ரோஜாவுக்கு வரும் துன்பங்களில் இருந்து ஒவ்வொரு முறையும் எப்படியாவது காப்பாற்றி விடுவான் அர்ஜூன். பலமுறை செத்து பிழைத்திருக்கிறாள் ரோஜா.
இப்போது கூட உண்மையான வாரிசு யார் என்று நிரூபிக்க செத்துப்போனது போல நடித்து தலைமறைவாக பண்ணை வீட்டில் வாழ்ந்து வருகிறாள் ரோஜா. நான் நிஜமாகவே செத்துப்போயிருப்பேன் என்று சொன்னதைக் கூட அர்ஜூனால் தாங்க முடியவில்லை. அந்த அளவிற்கு மனைவி மீது அபரிமிதமான காதலும் பாசமும் நிறைந்திருக்கிறது.
சாக்ஷி தலைமறைவாகி விட்டதால் அவளது சகாப்தம் ஓரளவிற்கு முடிந்தது போலத்தான். அதே போல அனுவும் சிறையில் அடைபட்டுள்ளதால் டம்மியாகி விட்டாள். இனியாவது ரோஜா தனது குடும்பத்தினரோடு நிம்மதியாக இருப்பாள் என்று நினைத்தால் இப்போது புது வில்லி நீலாம்பரி புறப்பட்டிருக்கிறாள்.
No comments:
Post a Comment