கள்ளக்குறிச்சியில் ஓப்பனாக நடக்கும் விபச்சாரம்… 5 அழகிகள் மீட்பு; புரோக்கர்கள் கைது! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, February 1, 2022

கள்ளக்குறிச்சியில் ஓப்பனாக நடக்கும் விபச்சாரம்… 5 அழகிகள் மீட்பு; புரோக்கர்கள் கைது!

கள்ளக்குறிச்சியில் ஓப்பனாக நடக்கும் விபச்சாரம்… 5 அழகிகள் மீட்பு; புரோக்கர்கள் கைது!


கள்ளக்குறிச்சி நகரப்பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு சில தனியார் தங்கும் விடுதிகளில் விபச்சாரம் நடைபெறுவதாக கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் கள்ளக்குறிச்சி காவல் நிலைய காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார் கள்ளக்குறிச்சி பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தங்கும் விடுதியில் மூன்று பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள சாத்தூர்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இதற்கு இடைத்தரகராக செயல்பட்டதும், உதயமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் பெண்களுடன் உல்லாசமாக இருக்க வந்ததும் தெரியவந்தது.

மேலும், தனியார் தங்கும் விடுதியில் மேலாளரான கள்ளக்குறிச்சி அருகே உள்ள மேல்விழி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண் புரோக்கராக செயல்பட்ட உஷா தனியார் தங்கும் விடுதியில் மேலாளர் பிரகாஷ் மற்றும் பெண்களிடம் உல்லாசமாக இருக்க வந்த ஏழுமலை ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இதேபோல கள்ளக்குறிச்சியில் உள்ள மற்றொரு தனியார் விடுதியில் காவல் ஆய்வாளர் முருகேசன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 3 பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பெண் புரோக்கராக செயல்பட்டதும் கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங்கத்தான் கிராமத்தைச் சேர்ந்த தனியார் தங்கும் விடுதி மேலாளர் அசோகன் என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.


இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கலா, அசோகன் ஆகியோரை கைது செய்தனர். கள்ளக்குறிச்சியில் உள்ள 2 தனியார் தங்கும் விடுதிகளில் விபச்சாரம் செய்த 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad