செக்ஸ் டார்ச்சர்: கணவன் சாப்பாட்டில் 'அதை' கலந்த மனைவி... 7 ஆண்டுகள் பின் அம்பலம்
கேரளாவில் கணவனின் சாப்பாட்டில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக மனநலம் சரியில்லாதவர்களுக்கு கொடுக்கும் மருந்தை கலந்து கொடுத்த மனைவி கைது செய்யப்பட்டார்.
கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா நகரைச் சேர்ந்தவர் சதீஷ் (38). இவரது மனைவிதான் ஆஷா (36). இவர் கடந்த 7 ஆண்டுகளாக கணவனுக்கு செய்து வந்த விபரீத சம்பவம்தான் பல மாநிலங்களில் பேசு பொருளாகியுள்ளது.
கணவன் சதீஷ் ஐஸ்கிரீம் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக சதீஷ் தினமும் இரவு வீட்டில் உணவு சாப்பிட்டவுடன் உடல்சோர்வு ஏற்பட்டு தூக்கம் வந்துவிடுமாம். ஒருவேளை சர்க்கரை நோயின் காரணமாக தனது உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாக முதலில் நினைத்த சதிஷ் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார். இருப்பினும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில், சுமார் 7 வருடங்களுக்கு மேலாக ஒவ்வொரு இரவும் சோர்வையும், தூக்கத்தையும் கடந்துதான் சதிஷ் மறுநாள் காலையை சந்தித்து வந்துள்ளார்.
இதனிடையே சதிஷ் சில நாட்கள் இரவில் வீட்டில் சாப்பிடாமல் வெளியில் கடைகளில் சாப்பிட்டு வந்துள்ளார். அந்த சமயத்தில் உடலில் எந்தப் பிரச்னையும் வரவில்லை. வழக்கம்போல சாப்பிட்ட உடனே வரும் தூக்கம், உடல் சோர்வு எதுவும் இல்லை. அப்போதுதான் வீட்டு சாப்பாட்டில் ஏதோ இருக்கிறது என்று அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.இதனிடையே சதீஷ் தன் மனைவியின் நெருங்கிய தோழியை சந்தித்து தனது பிரச்னைகளை கூறியுள்ளார். என் மனைவியிடம் பேசி சந்தேகத்தை தீர்க்குமாறு கூறியுள்ளார். இதுகுறித்து மலையாள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது '' ஆஷா உங்களுக்கு உணவில் ஒரு மருந்துப்பொருள் கலந்து கொடுத்து வருகிறார். என் கணவருக்கு இந்த மாத்திரை கொடுக்க பரிந்துரை செய்தார். அப்போதுதான் கணவன் நம் சொல்படி இருப்பார்கள் என்றார். நான் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது இந்த உண்மையை சொல்லாமல் இருக்க முடியாது'' என்றார் என அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment