விஜயகாந்த் அதிர்ச்சி; குறுக்கு வழியில் இறங்கியது திமுக! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, February 1, 2022

விஜயகாந்த் அதிர்ச்சி; குறுக்கு வழியில் இறங்கியது திமுக!

விஜயகாந்த் அதிர்ச்சி; குறுக்கு வழியில் இறங்கியது திமுக!


குறுக்கு வழியில் திமுக இறங்கி தேமுதிகவை மடக்கி இருக்கிறது. இதை பார்த்து விஜயகாந்த், பிரேமலதா அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் பதவிக் காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் புதிதாக உருவான 9 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28ம் தேதி தொடங்கிய நிலையில் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி நடக்கிறது. இதனை தொடர்ந்து தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

தற்போது திமுக தலையிலான கூட்டணி ஒருபுறத்திலும் அதிமுக, பாஜக, பாமக, உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக களம் காணும் வகையில் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன..
கடலூர் மாநகராட்சியில் அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் தற்போது தீவிரமாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

திமுக கூட்டணியினர் தங்களுக்கு பலம் வாய்ந்த வார்டுகளை கேட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடலூர் தேமுதிக முக்கிய நிர்வாகிகளை திமுக நிர்வாகிகள் மடக்கி உள்ளதாகவும், அவர்களுடன் ரகசியமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த ரகசிய பேச்சு வார்த்தையில் கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் உள்ள தேமுதிக நிர்வாகிகள் திமுகவுக்கு ஆதரவு அளிப்பது என்றும், அதற்கு பரிகாரமாக தேமுதிக முக்கிய நிர்வாகிகள் 2 வார்டுகளில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது எனவும் பேசப்படுவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ள நிலையில் தேமுதிகவும் இறங்க ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, கடலூர் தேர்தல் களம் ரொம்பவே சூடு பிடித்துள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad