முதல்வரின் அடுத்த அரசியல் மெகா திட்டம்... ரகசியத்தை உடைத்த ஓபிஎஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, February 15, 2022

முதல்வரின் அடுத்த அரசியல் மெகா திட்டம்... ரகசியத்தை உடைத்த ஓபிஎஸ்!

முதல்வரின் அடுத்த அரசியல் மெகா திட்டம்... ரகசியத்தை உடைத்த ஓபிஎஸ்!



முதல்வர் ஸ்டாலினின் அடுத்த அரசியவ் மெகா திட்டம் குறித்த ரகசியத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஓப்பனாக போட்டு உடைத்துள்ளார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நெல்லை டவுன் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இன்று பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியது:

அதிமுகவின் முதல் தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக அமைந்தது திருநெல்வேலி மாவட்டம் தான். எம்ஜிஆருக்கு பிறகு 16 ஆண்டுகளாக முதல்வராக கட்சியின் தலைவராக இருந்த ஜெயலலிதா தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வந்தார். இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று கருணாநிதி செய்த சதியை தாண்டி அதிமுகவை மாபெரும் கோட்டையாக ஜெயலலிதா உருவாக்கினார்.

ஜெயலலிதா ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் 100% நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு ஐந்தரை லட்சம் கான்கீரீட் வீடுகள் கட்டி கொடுத்தார். பத்து ஆண்டுகள் தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெற்றது. 2021லும் அதிமுக ஆட்சி தான் அமையும் சூழல் நமக்கு ஏற்பட்டது. ஆனால் எப்பவும் போல திமுக அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்தார்கள்.நான் முதல்வரானால் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று ஸ்டாலின் சொன்னார். நீட் தேர்வு ரத்து செய் வேண்டும் என்றால் சட்டமன்றத்தில மசோதோ கொண்டு வந்து அங்கீகரிக்கப்பட்டு ஜனாதிபதி கையெழுத்து போட வேண்டும். முதல்வர் கையெழுத்து போட்டால் எப்படி நீட் ரத்து செய்ய முடியும்?

தாய்மார்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ருபாய் என்று சொன்னார் பத்து மாதம் ஆகிவிட்டது இன்னும் கொடுக்கவில்லை. மாணவர்களின் கல்விக் கடன் ரத்து என சொன்னார்கள் ரத்து செய்யவில்லை. ஐந்து பவுன் நகை கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை நம்பி பாவம் மக்கள், குழந்தைகள் கழுத்தில் காதில் கிடந்ததை கழட்டி அடகு வைத்தார்கள். 50 லட்சம் பேர் அடகு வைத்தார்கள்.தேர்தலுக்கு பிறகு தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் தான் தள்ளுபடி என்று சொல்கிறார்கள். 13 லட்சம் பேர் தான் தகுதியுடையவர்கள் என்று கணக்கெடுத்துள்ளனர் எனவே 37 லட்சம் பேர் கடனாளியாக உள்ளனர் இதற்கு திமுக தான் பொறுப்பு.
எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ஒரு அவல ஆட்சி தான் நடைபெறும். இந்த தேர்தலை பொறுத்தவரை யார் ஆட்சி நல்ல ஆட்சி என்று எடை போட்டு பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு ஜெயலலிதா தான் 50% இட ஒதுக்கீடு கொடுத்தார். இந்த தேர்தல் தொண்டர்கள் நிற்க கூடிய தேர்தல். அவர்களை வெற்றி அடைய செய்ய வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது என்று ஓபிஎஸ் பேசினார்.கூட்டத்துக்கு பிறகு மம்தா பானர்ஜி தலைமையிலான எதிர்க்கட்சிகள் மாநாட்டிற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து செய்தியாளர் கேள்வியெழுப்பினர். அதற்கு, '10 மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் தமிழக மக்களுக்கு சொன்னதை செய்துவிட்டு அதன் பிறகு அகில இந்திய அரசியலில் கால் பதிக்கட்டும்' என்று ஓபிஎஸ் பதிலளித்தார்.

'சட்டமன்றத்தை முடக்கினாலும் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்' என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து கேட்டபோது, ' அது அவரது ஆசையாக இருக்கட்டும்' என்று ஓபிஎஸ் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad