திடீரென ஒத்திப்போகும் ஆசிரியர் தகுதித் தேர்வு: காரணம் இதுதான்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, February 4, 2022

திடீரென ஒத்திப்போகும் ஆசிரியர் தகுதித் தேர்வு: காரணம் இதுதான்!

திடீரென ஒத்திப்போகும் ஆசிரியர் தகுதித் தேர்வு: காரணம் இதுதான்!



ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) கிடீரென தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்புவதற்காக டிஆர்பி அவ்வபோது தேர்வு நடத்தி வருகிறது.

அதன்படி தற்போது பல்வேுறு பாடப்பிரிவில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பிப்ரவரி 12 -20 ஆம் தேதி வரை தேர்வுகளை நடத்த திட்டமிட்டு, அதற்கான இறுதிகட்ட பணிகளையும் வாரியம் மேற்கொண்டு வந்தது.இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அன்றைய தினம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த முதுநிலை பட்டதாரிஸ உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வுக்கான தேதி ஒருநாள் ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அதாவது பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு (ஞாயிறுக்கிழமை) ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள அட்டவணைப்படியே பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறும் எனவும் டிஆர்பி தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஜனவரி 29 ஆம் தேதி முதல் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்த தேர்வு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்று டிஆர்பி ஏற்கெனவே தெரிவித்திருந்தது   குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Top Ad