தமிழகத்தில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, February 20, 2022

தமிழகத்தில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்?

தமிழகத்தில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்?



மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த 1 ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:
மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்பட்ட முடிவு வரவேற்கத்தக்கது. எனினும், நடப்பு கல்வி ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கோடை விடுமுறை வருகிறது. கொரோனா காலக் கட்டம் காரணமாக, 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுவது சந்தேகமே. அவர்களுக்கு தேர்வு நடைபெறுவதற்கான வாய்ப்பும் குறைவு.எனவே, கொரோனா பரவல் குறைந்து வந்தாலும், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும். எனினும் ஆன்லைன் வாயிலாக பாடங்களை நடத்தலாம். பொதுத் தேர்வு எழுத உள்ள 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும். அடுத்த கல்வி ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை புத்துணர்ச்சியுடன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
தற்போது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், இது குறித்து விரைவில் ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad