ஈவிஎம் மெஷினை எடுத்துச்செல்ல விடாமல் போராட்டம்… மரக்காணத்தில் கலவரம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, February 19, 2022

ஈவிஎம் மெஷினை எடுத்துச்செல்ல விடாமல் போராட்டம்… மரக்காணத்தில் கலவரம்!


ஈவிஎம் மெஷினை எடுத்துச்செல்ல விடாமல் போராட்டம்… மரக்காணத்தில் கலவரம்!



விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்துச்செல்ல விடாமல் திமுக தவிர பிற கட்சிகள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் கலவரம் ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 வரை நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5, 6, 7, 11, 12, 13 ஆகிய வார்டு களுக்கான வாக்குப்பதிவு மரக்காணம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.கூட்டணியே என்னைக்கும் கிடையாது; அன்புமணி ராமதாஸ்!

வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லும் பணி துவங்கியது. அப்போது அதிமுக, பாஜக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள், கட்சியின் நிர்வாகிகள் பலர் வாக்குப்பதிவு எந்திரங்களை ஏற்ற விடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கூறியதாவது:
"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது வாக்குச்சாவடி உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக தியாகராஜன் என்பவரை நியமனம் செய்து இருந்தனர். இந்நிலையில் தியாகராஜன் என்பவர் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதனால் அவருக்கு பதிலாக கடந்த 15-ஆம் தேதி மணிவாசகம் என்பவரை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகம் சார்பில் நியமித்துள்ளனர். நேர்மையாக தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றுவதன் காரணம் என்ன இதன் பின்னணியில் வாக்கு எண்ணிக்கைகளை மாற்றம் சதி வேலை உள்ளதா என்று சந்தேகம் உள்ளது" எனக் கூறினர்.

இதன் காரணமாக வாக்குச்சாவடி முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக பாஜக சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வாக்குச்சாவடி முன்பு ஒன்று திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் வாக்குச்சாவடி கலவர பூமி போல் காட்சியளித்தது.இதனையடுத்து காவல்துறை சார்பில் ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் அதிவிரைவு படைகள் வரவழைக்கப்பட்டு முற்றுகையில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்த பின்னர் மின்னணு எந்திரங்களை பாதுகாப்பாக பாதுகாப்பு அறைக்கு கொண்டு சென்றனர்.



No comments:

Post a Comment

Post Top Ad