இனி ரயில் டிக்கெட் எடுப்பது ரொம்ப ஈஸி… தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு!
ரயில் பயணிகளின் வசதிக்காக க்யூ ஆர் கோடு(QR Code) மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து நாள்தோறும் மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, தூத்துக்குடி, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பல்லாயிரக்கணக்கானோர் ரயில் மூலம் பயணம் செய்து வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில், தொற்று பரவல் குறைந்துள்ளதால் வழக்கமான வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால், ரயிலில் பயணம் செய்யும் பொதுமக்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. பல இடங்களில் டிக்கெட் எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே தனது டிவிட்டர் பக்கத்தில் பதவிட்டுள்ளதாவது:
"சென்னையில் விரைவு மற்றும் மின்சார ரயில்களில் டிக்கெட் எடுப்பதில் காலதாமதம் ஏற்படுத்துவதை தவிர்க்க தெற்கு ரயில்வே தானியங்கி டிக்கெட் விநியோகம் செய்யும் இயந்திரத்தை டிக்கெட் கவுன்டர்கள் அருகில் வைத்துள்ளது.இதனை பயன்படுத்தி பயணிகள் எளிதாக தாங்களே பயணச்சீட்டை எடுத்துக்கொள்ளலாம். இந்த நிலையில் மேலும் பயணிகளின் கூடுதல் வசதிக்காக தானியங்கி டிக்கெட் வினியோகம் செய்யும் எந்திரத்தில் ‘க்யூ ஆர்’ கோடு (QR CODE) மூலமாக பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறையையும் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
‘க்யூ ஆர்’ கோடை ஸ்கேன் செய்து கூகுள் பே, போன்-பே உள்ளிட்ட பணம் செலுத்தும் செயலிகள் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம். மேலும், இந்த 'க்யூ ஆர் கோடு' வசதி மூலம் மாதந்திர பயணச்சீட்டு புதுப்பித்தால் செய்யும் பயணிகளுக்கு 0.5% சலுகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment