ஸ்டாலினை இந்த ஆங்கிள்ல பாருங்க: அண்ணாமலைக்கு திருநாவுக்கரசர் அட்வைஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, February 15, 2022

ஸ்டாலினை இந்த ஆங்கிள்ல பாருங்க: அண்ணாமலைக்கு திருநாவுக்கரசர் அட்வைஸ்!

ஸ்டாலினை இந்த ஆங்கிள்ல பாருங்க: அண்ணாமலைக்கு திருநாவுக்கரசர் அட்வைஸ்!



ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு சாத்தியமில்லை என்று சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவையை முடக்குவதற்கான வாய்ப்பே கிடையாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்றெல்லாம் இந்தியாவில் சாத்தியமில்லை. பாஜக, ஆர்எஸ்எஸ் குறிப்பிடும் ஒரே நாடு என்பது இந்தியா கிடையாது. அது அகண்ட பாரதம். இந்தியா, வங்கதேசம், மியான்மர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை அடங்கிய பகுதியைத்தான் அந்தக் காலத்தில் இருந்தே அகண்ட பாரதம் என்று ஆர்எஸ்எஸ் சொல்லி வருகிறது. இந்தக் காலத்தில் இதெல்லாம் சாத்தியம் இல்லை. சீன அச்சுறுத்தல், பாகிஸ்தான் ஊடுருவல் என இப்போதைய இந்தியாவைப் பாதுகாக்கவே பெரும்பாடு பட வேண்டியுள்ளது. எனவே, இந்த அகண்ட பாரதம் என்பதெல்லாம் நடைமுறை சாத்தியம் கிடையாது.
பல மாநிலக் கட்சிகள் உள்ள இந்தியாவில் ஒரே தேர்தல் என்பதும் சாத்தியம் கிடையாது. ஏனெனில், மாநிலத்தில் உள்ள ஆட்சியை பாஜகவே கவிழ்த்துவிடுகிறது. மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவையை முடக்கி வைத்திருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அதிக எம்எல்ஏக்களை பெற்றிருந்தது. ஆனால், சிலரை இழுத்து பாஜக ஆட்சியை அமைத்துவிட்டனர். இப்படி சில மாதங்களில் ஆட்சியைக் கவிழ்த்தால் எஞ்சிய 4 ஆண்டுகளுக்கு ஆளுநரா ஆட்சி செய்வார்? ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவு மிச்சமாகும் என்று பேசவும் யோசிக்கவும் நன்றாக இருக்கும். அப்படியே ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து பேச வேண்டும்.நடைமுறை சாத்தியங்கள், பின்விளைவுகள், ஆட்சி கவிழ்ந்தால் என்ன செய்வது, இடைக்காலத்தில் யார் ஆட்சி செய்வார் என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்து பேச வேண்டும். ஒரே நாள் இரவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்ததுபோல், நாடு முழுவதும் உள்ள மாநில ஆட்சிகளைக் கலைத்துவிடுவதாகவோ, ஒரே தேர்தல் என்று எல்லாம் அறிவிக்க முடியாது. திமுக ஆட்சிக்கு வந்தே சில மாதங்கள்தான் ஆகியுள்ளன. ஆனால், சட்டப்பேரவையை முடக்குவோம் என்று பேசுவதெல்லாம் சர்வாதிகார மனப்பான்மை கொண்ட, ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களின் குரல்.
10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தது. சட்டப்பேரவையை முடக்குங்கள், ஆட்சியைக் கலையுங்கள் என்று திமுக கோரியதில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் சட்டப்பேரவையை முடக்குவோம் என்பது முடக்குவாதம், இது சரியான வாதமல்ல. தமிழ்நாட்டில் அந்த முடக்கு வாதத்துக்கான வாய்ப்பே கிடையாது. இந்தியாவிலேயே நம்பர் 1 முதல்வராக மு.க. ஸ்டாலின் செயல்படுவதாக அனைவரும் பாராட்டுகிறார்கள். இதெல்லாம் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலைக்குத் தெரியவில்லையெனில், அவர் திருவண்ணாமலையில் உயரத்தில் ஏறி நின்று பார்த்தால் தெரியும்" என்று பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad