மார்ச் 25 முதல் மீண்டும் முழு ஊரடங்கு - அரசு எடுத்த திடீர் முடிவு? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, March 23, 2022

மார்ச் 25 முதல் மீண்டும் முழு ஊரடங்கு - அரசு எடுத்த திடீர் முடிவு?

மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு அரசு திடீரென்று விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு அரசு திடீரென்று விளக்கம் அளித்துள்ளது.

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பரவிய கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இதற்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜிலின், சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி கடைபிடிக்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சீனாவின் மற்றொரு பெரிய நகரமான ஷாங்காயிலும், கடந்த மூன்று நாட்களாக, கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ளது. இதனால் ஷாங்காயில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதை அடுத்து, அத்தியாவசியப் பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பொது மக்கள் வாங்கிக் குவித்தனர்.
இது தொடர்பாக ஷாங்காய் நகர அதிகாரிகள் கூறியதாவது:
முழு ஊரடங்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை இரண்டு பெரிய மைதானங்களில் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Post Top Ad