2 நாட்கள் தொடர் மின்வெட்டு - வெளியானது அதிர்ச்சி தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, March 27, 2022

2 நாட்கள் தொடர் மின்வெட்டு - வெளியானது அதிர்ச்சி தகவல்!

தடையில்லா மின்சாரம் கிடைக்க செய்வதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தின் போது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இருக்கவும், தடையில்லா மின்சாரம் கிடைக்க செய்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்; பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு தொழிற்சங்கங்கள், வரும் 28, 29 ஆகிய தேதிகளில், அதாவது நாளையும், நாளை மறுநாளும், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச. இப்போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறது. இதில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளின் தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.

வேலை நிறுத்தத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பங்கேற்பதால் அரசு பணிகள் கடுமையாக பாதிக்கக் கூடும் என்பதால் பணிக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “நோ ஒர்க் நோ பே” என்ற அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாகவும் மத்திய, மாநில அரசுகள் எச்சரித்துள்ளன.
இந்நிலையில் அனைத்து மாநிலங்கள், மின்சார விநியோக நிறுவனங்களுக்கு மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தின் போது பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது. சீரான மின்சார விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனை, ரயில்வே உள்ளிட்ட முக்கியமான இடங்களில் மின்சார தட்டுப்பாடு இல்லை நிலையை உறுதிபடுத்த வேண்டும். மின் தட்டுப்பாடு புகார்களை நிவர்த்தி செய்ய 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்பட வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad