உதகை: பெண் மாவோயிஸ்ட் - 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, March 5, 2022

உதகை: பெண் மாவோயிஸ்ட் - 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி..!

உதகையில் பெண் மாவோயிஸ்ட்டை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு உதகை அருகே உள்ள நெடுகல்கம்பை பகுதியில் பொது மக்களை மூளைச்சலவை செய்யும் விதமாகவும், அரசுக்கு எதிராக மக்களை சேர்த்து கூட்டம் கூட்டியதற்காகவும் மாவோயிஸ்ட் சாவித்திரி என்பவரை வயநாடு பகுதியில் கேரளா போலீசார் கைது செய்து திருச்சூர் பகுதியில் உள்ள விய்யூர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நெடுகல்கம்பை பகுதியில் பொது மக்களை மூளைச்சலவை செய்யும் விதமாகவும், அரசுக்கு எதிராக மக்களை சேர்த்து கூட்டம் கூட்டியது தொடர்பான வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனால் அவரிடம் விசாரணை செய்ய நீலகிரி மாவட்ட காவல்துறையினர் கேரளா காவல்துறையிடம் அனுமதி கோரி, விசாரணைக்காக சாவித்திரியை துப்பாக்கி ஏந்திய போலீஸார் பலத்த பாதுகாப்புடன் கேரள மாநிலத்திலிருந்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.
நேற்று நீதிபதி இல்லாததால் வழக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சாவித்திரி கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சாவித்ரியை காவல்துறையினர் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். பின்னர் வழக்கினை விசாரணை செய்த நீதிபதி சஞ்சய் பாபா மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் பாதுகாப்புடன் அவரை அழைத்து சென்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad