தருமபுரியில் 3000 ஆண்டு பழமையான 'வட்டக்கல்' கண்டுபிடிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, March 9, 2022

தருமபுரியில் 3000 ஆண்டு பழமையான 'வட்டக்கல்' கண்டுபிடிப்பு!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மஞ்சநாயக்கனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட நரசிபுரத்தில் உள்ள கரடு பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால வட்டகல் எனப்படும் ( கல் வட்டங்கள்) ஈமச்சின்னங்களை புதுபட்டியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இப்பகுதியில் உள்ள வட்டகல் மற்றும் ஈமசின்னங்களை முழுமையாக ஆய்வு செய்யும் பொழுது அந்த கால மனிதர்களின் வாழ்க்கை முறை குறித்த வரலாற்றுச் சுவடுகளை கண்டறிய முடியும்.
மேலும். தருமபுரி மாவட்டத்தில் இதேபோன்று பங்குநத்தம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வட்டகல் கண்டுபிடிக்கபட்டு அவற்றை தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து உள்ளது. தற்போது நரசிபுரத்தில் 50 க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருக்கின்றன.

பல கல் வட்டங்கள் அழிக்கப்பட்டு விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் சமூக விரோதிகள் சிலர் புதையல்கள் இருக்கும் என்ற நோக்கத்தில் கல் வட்டங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பள்ளம் தோண்டியுள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றால் பண்டைய பெருங்கற்கால ஈமச் சின்னங்களும் வட்டகல் சுவடுகள் அனைத்தும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதால் உடனடியாக தொல்லியல் துறையும், தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து நரசிபுரம் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad