5 நாட்கள் வேதனை... சிறுமி அனுபவித்த கொடுமை... மதுரையில் பெரும் பரபரப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, March 6, 2022

5 நாட்கள் வேதனை... சிறுமி அனுபவித்த கொடுமை... மதுரையில் பெரும் பரபரப்பு

மதுரை சிறுமி தற்கொலை வழக்கில் போக்கோ சட்டம் கொலை வழக்கு உள்பட 6 பிரிவுகளில் வழக்குபதிவு. 10இல் இதுவரை 7 பேர் கைது.

மதுரை மாவட்டம் தும்பைபட்டி சிறுமி வழக்கை போக்சோ மற்றும் கொலை வழக்காக காவல்துறை பதிவு செய்துள்ள நிலையில், மாவட்ட எஸ்பி பாஸ்கரன் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த தகவல்;

மதுரை மாவட்டம் தும்பைபட்டி கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் - சபரி என்பவர்களது 17 வயது சிறுமி கடந்த மாதம் 14ம் தேதி மாயமாகியுள்ளார். இது பற்றி மேலூர் அனைத்து மகளிர் காவல்நிலைத்தில் புகார் அளிக்கப்பட்டது. சிறுமி மாயமான விசாரனையில், நாகூர் அனிபா என்பவருடன் சிறுமி பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று. சென்றுள்ளார். இதனையடுத்து 24ம் தேதி வழக்குபதிவு செய்து காவல் துறையினர் 3 தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி உடல்நிலை சரியில்லாத சிறுமியை நாகூர் அனிபா தனது தாயார் மூலம் சிறுமியின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். உடல் நிலை மோசமடைந்து சிறுமிக்கு மேலூரிலும் பின்பு மதுரை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமியை கடத்தி சென்ற நாகூர் அனிபா தனது நண்பர் வீட்டிலும் பின்னர் ஈரோடு பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள சித்தப்பா வீட்டிலும் தங்கியுள்ளார்.
இந்நிலையில் சிறுமி, மற்றும் நாகூர் அனிபா இருவரும் எலி பேஸ்ட் சாப்பிட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிக்கிஹே பெற்றுள்ளனர். இதில், சிறுமியின் உடல்நிலை மோசமாகிவிட மதுரை தும்பை பட்டியில் உள்ள சிறுமியின் தாயார் வீட்டில் நாகூர் அம்மா மூலம் விடப்பட்டார். பின்னர் சிறுமியை சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவ மனையில் சேர்ந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று சிறுமி உயரிழந்தார்.

மதுரை சிறுமி பலாத்காரம், நடந்தது என்ன..? படிக்க படிக்க அதிர்ச்சி..!

சிறுமியின் உடலில் 5 நாட்களாக ஊறியிருந்த எலி மருந்தின் வீரியத்தன்மை அதிகரித்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை. மேலும், எலிமருந்து விஷம் ஒவ்வொரு உறுப்புகளை செயல் இழக்க செய்யும்.
இந்த வழக்கில் சம்பந்தபட்ட 10 பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

கூட்டு பாலியல் பலாத்காரம் இல்லை
சிறுமி தங்கியிருந்த இடம், குற்றவாளிகள் ஒப்புதல் போன்றவற்றை விசாரணை செய்ததில் சிறுமியும், நாகூர் அனிபாவும் கணவன் மனைவியாக இருந்துள்ளார். இதனால் போக்சோ சட்டம், கடத்தல் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மருத்துவர்கள் குழு பிரேத பரிசோதனை நடத்திய பின்பு முழு விவரம் தெரிய வரும் என்றும் முதல் கட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை, அவரது உடலில் எந்த காயங்களும் இல்லை, மருத்துவர்கள் அறிக்கை வன்கொடுமை நடந்ததை உறுதிப்படுத்தவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
பெற்றோரிடம் உண்மை நிலவரங்களை விளக்கி கூறியுள்ளோம். சிறுமி இறந்ததினால் மேலூர் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க கூடுதல் கண்காணிப்பு மற்றும் மாவட்ட நிர்வாகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது என மதுரை மாவட்ட எஸ்பி பாஸ்கரன் கூறினர்.

No comments:

Post a Comment

Post Top Ad