விருதுநகர் பாலியல் வழக்கு: 8 பேரை காவலில் எடுக்க முடிவு..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, March 28, 2022

விருதுநகர் பாலியல் வழக்கு: 8 பேரை காவலில் எடுக்க முடிவு..!

விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் 22 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் இன்று காலை மனு தாக்கல் செய்தனர்.
விருதுநகரில் கடந்த வாரம் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திமுகவை சேர்ந்த ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட 8 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 7 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்தனர்.
விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பிக்கள் சரவணன் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரியான வினோதினி ஆகியோரிடம் சிபிசிஐடி எஸ்பி. முத்தரசி ஆலோசனைகளை நடத்தினார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரையும், ராமநாதபுரத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதி மன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் எஸ்பி முத்தரசி, டிஎஸ்பிக்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் சாவித்திரி ஆகியோர் நேரில் சென்று மனு தாக்கல் செய்துள்ளனர். சிபிசிஐடி தரப்பில் 7 நாட்கள் கேட்கபட்டுள்ளது. இந்நிலையில்,மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மதுரை மத்திய சிறையில் உள்ள நால்வரும் நாளை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுத்தப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad