சம்பளம் பிடித்தம் இல்லை - அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, March 27, 2022

சம்பளம் பிடித்தம் இல்லை - அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்?

அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடிக்கக்கூடாது என விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்
மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு, தமிழக அரசு அனுமதி அளிக்கிறதா? இல்லையா? என்பதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நாடு முழுவதும் நாளையும், நாளை மறுநாளும் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
இதில் போக்குவரத்து, மின் துறை, வங்கி, காப்பீடு துறை பணியாளர்கள் என 20 கோடி பேர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசை பொறுத்தவரையில், வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை. அதேவேளையில் போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அறிவித்திருப்பது தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. தங்கள் உரிமைகளுக்காக போராடும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்வது எந்த வகையில் நியாயம்.

இதன் மூலம் மத்திய அரசுக்கு மறைமுகமாக எதிர்ப்பும் நேரடியாக ஆதரவும் தமிழக அரசு அளிக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ஊழியர்களின் போராட்டம் குறித்த விஷயத்தில் தமிழக அரசு தெளிவான முடிவை எடுப்பதோடு போராட்டத்திற்கு அனுமதி அளிக்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும் 28, 29 ஆகிய தேதிகளில் உரிமைக்காக போராட்டம் நடத்த உள்ள ஊழியர்களின் சம்பளத்தை பிடிக்கக் கூடாது. தமிழக அரசின் செயல் பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவது போல் உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad