தோழியின் தாய் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்: அடுத்து நேர்ந்த அதிர்ச்சி..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, March 24, 2022

தோழியின் தாய் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்: அடுத்து நேர்ந்த அதிர்ச்சி..!

நாகர்கோவில் அருகே பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த பெண்ணுக்கு 48 வயதாகிறது. இவருக்கு 20 வயதில் மகள் உள்ளார். இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே மருத்துவமனையில் வேலை பார்க்கும் பார்த்திபன் (21) என்பவருக்கும் இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பார்த்திபன் அடிக்கடி தோழியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். தோழியின் குடும்பமும் பார்த்திபனை வீட்டில் ஒருவராக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், ஒருநாள் தோழியின் வீட்டுக்கு வந்த பார்த்திபன் தோழியின் தாய் பாத்ரூமில் குளிப்பதை ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர் அந்த வீடியோவை அவரிடம் காட்டி, எனக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடு என்றும் பணம் கொடுக்காவிட்டால் வீடியோ முகநூலில் கசிந்துவிடும் என கூறி மிரட்டியுள்ளார். இதனால் பேரதிர்ச்சி அடைந்த அந்த பெண் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பார்த்திபனை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையின்போது பார்த்திபனின் செல்போன் மற்றும் லேப்டாப்பை ஆய்வு செய்தனர். அதில், தோழியின் தாய் குளிப்பதை பார்த்திபன் வீடியோ எடுத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். உடனே அவரை கைது செய்த போலீசார், இதுபோன்ற செயல்களில் பார்த்திபன் ஏற்கனவே ஈடுபட்டுள்ளாரா என்பதை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad