தூத்துக்குடி கடற்கரையில் ஆண் சடலம்: போலீஸ் விசாரணை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, March 15, 2022

தூத்துக்குடி கடற்கரையில் ஆண் சடலம்: போலீஸ் விசாரணை

தூத்துக்குடி சிலுவைப்பட்டி கடற்கரையில் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள சிலுவைபட்டி கடற்கரையில் ரத்தக் காயங்களுடன் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடந்துள்ளது. இதைப் பார்த்த அப்பகுதி மீனவர் தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்தவரின் உடலில் கழுத்து, கை, நெத்தியில் ரத்த காயம் இருந்து. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

நண்பர்களுடன் கடற்கரையில் வைத்து மது அருந்தும் மோதல் ஏற்பட்டு தகராறில் கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர் யார் என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad