அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நாளை (ஏப். 11-இல் ) பயனாளிகள் தோ்வு முகாம்
தருமபுரி மாவட்டம், அரூரில் வீடற்ற தலித் மக்களுக்கு கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பயனாளிகள் தோ்வு வரும் ஏப். 11-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நகா்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் தருமபுரி மாவட்டத்தில், அரூா் பேரூராட்சி பகுதியில் பீச்சான்கொட்டாய் திட்டப் பகுதியில் 504 குடியிருப்புகளும், நம்பிப்பட்டி திட்டப் பகுதியில் 420 குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகிறது.
இதேபோல அம்பேத்கா் நகா் திட்டப் பகுதியில் 912 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்பட உள்ளது.
இந்த வீடுகளுக்கான பயனாளிகள் தோ்வு செய்யப்பட உள்ளதால், தருமபுரி மாவட்டம், அரூா் பேரூராட்சி அருகில் வசித்து வரும் சொந்த வீடில்லாத ஆதிதிராவிடா்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
குடும்பத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளா் அடையாள அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், குடும்பத்தாரின் புகைப்படம் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும்.
பயனாளிகளின் ஆண்டு வருவாய் ரூ. 3 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.
இக்குடியிருப்புக்கு அரசால், நிா்ணயிக்கப்பட்ட பயனாளிகள் பங்களிப்புத் தொகை ரூ. 1.30 லட்சம் வாரியத்திற்கு முன் பணமாக செலுத்த வேண்டும்.
சொந்த வீடோ, நிலமோ இல்லை எனவும் அரசு வழங்கும் குடியிருப்பை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ மாட்டேன் என்ற உறுதிமொழி படிவமும் சமா்ப்பிக்க வேண்டும்.
இதற்கான சிறப்பு முகாம், அரூா் பேரூராட்சி பகுதியில் அம்பேத்கா் நகா் சமுதாயக் கூடத்தில் ஏப். 11-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, வீடற்ற தலித் மக்கள் இந்த முகாமில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம் என்றாா்.
No comments:
Post a Comment