திருக்குறள் - குறள் 450 - பொருட்பால் – பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்: 450
குறள் வரி:
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
அதிகாரம்:
பெரியாரைத் துணைக்கோடல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
நல்லவர் உறவை விட்டுவிடுவது, பலரைப் பகைவராக்கிக் கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை தருவது ஆகும்.
No comments:
Post a Comment