கூட்டுறவுத்துறை காலிப்பணியிடம் நிரப்ப வெளியிட்ட அறிவிப்பு ரத்து - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, April 11, 2022

கூட்டுறவுத்துறை காலிப்பணியிடம் நிரப்ப வெளியிட்ட அறிவிப்பு ரத்து

கூட்டுறவுத்துறை காலிப்பணியிடம் நிரப்ப வெளியிட்ட அறிவிப்பு ரத்து

விருதுநகர் மண்டலம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவர், இணைப்பதிவாளர் செந்தில்குமார் செய்தி குறிப்பு:

விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் நியாயவிலை கடைகளில் காலியாக உள்ள 94 விற்பனையாளர்கள், 11 கட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 2020 நவ. 26 முதல் டிச. 15 வரை நேர்முகத்தேர்வு நடந்தது.2021 ஆகஸ்ட் 25 ல் நடந்த கூட்டுறவு துறை மானிய கோரிக்கையின் போது, கூட்டுறவுதுறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு, பதிவாளர் கடிதத்தினை செயல்படுத்தும் விதமாக 2020ல் விருதுநகர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad