12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது? அமைச்சர் சொன்ன தகவல்!
தமிழகத்தில் புதிய கல்வி ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்றாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த பின்னர், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து யோசிக்க முடியும்.
இருப்பினும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படாமல் உள்ள நிலையில் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு வகுப்புகள் கால தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் நேற்று (மே 31) செய்தியாளர்களிடம் பேசினார். "வைரஸ் தொற்று பரவல் காரணமாக அனைத்து துறையினருக்குமே நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாகக் குறிப்பிட்ட காலம் நாம் பொறுமையாக இருக்க வேண்டும். பரவல் எந்த அளவுக்கு விரைவாகக் குறைகிறதோ அதற்கேற்ப விரைவாக பொதுத் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவர்களது உடல்நலனும் உயிரும் முக்கியம்" என்று கூறினார்.
No comments:
Post a Comment