தமிழகத்தில் ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி: முதல்வர் சொன்ன குட் நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, May 31, 2021

தமிழகத்தில் ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி: முதல்வர் சொன்ன குட் நியூஸ்!

தமிழகத்தில் ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி: முதல்வர் சொன்ன குட் நியூஸ்!



தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினம் தினம் புதுப்புது உச்சங்களை எட்டிய நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. தடுப்பு நடவடிக்கைகளில் அரசு இயந்திரம் வேகமாக இயங்கி வருகிறது. இருந்தபோதும் எப்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்படும் என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் தமிழக மக்களிடம் பேசியுள்ளார். அதில், “முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மே 24 முதல் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பாதிப்பு குறைந்து வருகிறது. கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும் பாதிப்பு சில நாள்களாக குறைந்து வருகிறது. வரும் நாள்களில் இவை மேலும் குறையும். எனவே பாதிப்பை குறைக்க முழு ஊரடங்கைத் தவிர வேறு வழி இல்லை.

ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது உண்மைதான். அதற்காகவே அரசு ரேஷன் கடைகள் மூலம் 2000 ரூபாய் வழங்கியது, இரண்டாவது தவணையாக மீண்டும் 2000 ரூபாய் வழங்க உள்ளது. 13 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. இதை பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜியே பாராட்டியுள்ளார். காய்கறிகள், மளிகைப் பொருள்களின் வீடு தேடி வரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றினால் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கைகள் பற்றாக்குறை இல்லை. தடுப்பூசிகள் அதிகம் செலுத்தப்படுவது தமிழகத்தில்தான். ஆர்டிபிசிஆர் சோதனை அதிகமாக நடப்பதும் தமிழகத்தில் தான்.

கொரோனா தடுப்பு பணியில் என்னையே நான் முழுதாக அர்ப்பணித்துள்ளேன். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்தவர்களை பிபிஇ கிட் அணிந்து சென்று பார்த்து ஆறுதல் கூறினேன். உள்ளே செல்ல வேண்டாம் என அக்கறையுடன் பலர் கூறினாலும், உயிரை பணயம் வைத்து போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், பாதிக்கப்பட்டோர், அவர்களது குடும்பத்தினர் ஆகியோருக்கு நம்பிக்கையூட்டும் விதமாகவே நான் உள்ளே சென்றேன்.

முதல் அலைக்கு சரியாக முற்றுப்புள்ளி வைக்காததால்தான் தமிழகத்தில் இரண்டாவது அலை இவ்வளவு மோசமாக உள்ளது. இரண்டாவது அலை நமது ம்ருத்துவ கட்டமைக்க்கும், நிதி துறைக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே அடுத்த வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்த முடியும். விரைவில் இந்த கொரோனா தடுப்பு சுவர் உடைக்க வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad