ரேஷன் அட்டைக்கு 2000ரூ: இதை வாங்க இவ்வளவு போராட்டமா?
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு மேலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
காய்கறிக் கடைகள், பலசரக்கு கடைகள், இறைச்சி கடைகள் ஆகியவை மட்டும் காலை 6 மணி முதல் 9 வரை மட்டும் திறந்திருக்க வேண்டும் என்றும் மற்ற கடைகள் திறக்கப்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தவிர்க்கமுடியாத வழிமுறை என்றாலும் இதனால் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. இதை தவிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் மே மாதம் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் 13 மளிகைப் பொருள்கள் அடங்கிய பையும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment