சொந்த கட்சியை சேர்ந்தவரையே கைது செய்ய சொன்ன முதல்வர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, May 15, 2021

சொந்த கட்சியை சேர்ந்தவரையே கைது செய்ய சொன்ன முதல்வர்!

சொந்த கட்சியை சேர்ந்தவரையே கைது செய்ய சொன்ன முதல்வர்!

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து வருகிறார் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி.

அவரது கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் கனுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்துவருகிறார்.

சமீபத்தில் கனுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜு சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய பெயிலை இரத்து செய்ய வேண்டுமென்று கூறியிருந்தார். மேலும் ஜெகன்மோகன் ரெட்டி பெயில் விதிமுறைகளை மீறுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், இன்று ( மே 15) ஆந்திர மாநில குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறையினர், மக்களவை உறுப்பினர் கனுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜுவை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மேலும், குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறையினர் அவர் மீது, ஜெகன்மோகன் தலைமையிலான அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும், மக்கள் மத்தியில் வெறுப்பை தூண்டியதகாவும் கூறி தேசத்துரோக வழக்கை பதிவுசெய்துள்ளனர்.

சமூக ஒற்றுமை அல்லது தேசிய ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கனுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜுவுக்கு எதிராக வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad