கொரோனாவில் இறந்தால் இழப்பீடு? -பட்டும் படாமல் சொல்லும் அமைச்சர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, May 15, 2021

கொரோனாவில் இறந்தால் இழப்பீடு? -பட்டும் படாமல் சொல்லும் அமைச்சர்!

கொரோனாவில் இறந்தால் இழப்பீடு? -பட்டும் படாமல் சொல்லும் அமைச்சர்!


சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி சில நாட்களாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அவர் ஆய்வு மேற்கொண்டபோது கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் அமைச்சரை சூழ்ந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

' ஆத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. இதன் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு நோயாளிகள் கண்முன்னே இறக்கின்றனர். 'ரெம்டெசிவிர்' மருந்து கேட்டு இரு வாரமாகியும் கிடைக்கவில்லை' என அமைச்சரிடம் அவர்கள் கண்ணீருடன் புகார் தெரிவித்தனர்.

'ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கை வசதியை ஏற்படுத்தவும், ரெம்டெசிவிர் மருந்து விரைவாக கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்று அமைச்சர் சமாதானம் கூறினார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'கொரோனா தொற்றுக்கு ஆளாலோர் உடனே சிகிச்சைக்கு வராததால் இறப்பு ஏற்படுகிறது. கொரோனாவால் இறப்பவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad