ரூ.2,000 நிவாரணம் இன்னும் வாங்கலையா; தமிழக அரசு புதிய ஏற்பாடு? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, May 23, 2021

ரூ.2,000 நிவாரணம் இன்னும் வாங்கலையா; தமிழக அரசு புதிய ஏற்பாடு?

ரூ.2,000 நிவாரணம் இன்னும் வாங்கலையா; தமிழக அரசு புதிய ஏற்பாடு?


தமிழகத்தில் கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஏராளமானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து கொண்டிருக்கின்றனர். கொரோனா மரணங்களால் பல்வேறு குடும்பங்கள் நிர்கதியாய் நிற்கின்றன. இந்த சூழலில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4,000 கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதாவது தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை உடனடியாக நிறைவேற்றும் வகையில் முதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்தில் ஒன்றாக கொரோனா நிவாரணமும் இடம்பிடித்தது. இதில் முதல்கட்டமாக ரூ.2,000ஐ மே மாதமே வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து 2.09 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2,000 வழங்கும் திட்டத்தை கடந்த 10ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதலில் டோக்கன் வழங்கப்பட்ட நிலையில், நிவாரணத் தொகை வழங்கும் பணிகள் 15ஆம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் வரை 2.02 கோடி கார்டுதாரர்களுக்கு ரூ.4,040 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது. இது மொத்த எண்ணிக்கையில் 96.4 சதவீதம் ஆகும். எஞ்சிய 7.52 லட்சம் கார்டுதாரர்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை.

இவர்களில் பலர் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் உதவிக்காக உறவினர்களும் மருத்துவமனைகளுக்கு நடையாய் நடந்த வண்ணம் இருக்கின்றனர். சிலர் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக இவர்களது குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்க முடியாத சூழல் நிலவுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கே சென்று நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதனை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad