ஜி7 மாநாட்டில் பரபரப்பு.. இந்திய அதிகாரிகளுக்கு கொரோனா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 6, 2021

ஜி7 மாநாட்டில் பரபரப்பு.. இந்திய அதிகாரிகளுக்கு கொரோனா!

ஜி7 மாநாட்டில் பரபரப்பு.. இந்திய அதிகாரிகளுக்கு கொரோனா!


ஜி7 மாநாடு பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடைபெறுகிறது. மூன்று நாள் நடைபெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதிநிதிகள் லண்டனுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்திய அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய அதிகாரிகள் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.
ஜி7 மாநாட்டில் கூட வீடியோ வாயிலாக கலந்துகொள்ள அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்திய அதிகாரிகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக பிரிட்டன் அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரிட்டன் விதிமுறைகளின்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் வீடியோ வாயிலாக உரையாடவுள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad