வங்க கடலில் உருவாகும் புதிய புயல்? சென்னைக்கு மழை எப்படி? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, May 19, 2021

வங்க கடலில் உருவாகும் புதிய புயல்? சென்னைக்கு மழை எப்படி?

வங்க கடலில் உருவாகும் புதிய புயல்? சென்னைக்கு மழை எப்படி?

மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வரும் மே 23ஆம் தேதி (ஞாயிறு) அன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே 22, 23 ஆகிய நாள்களில் தமிழக கடலோர பகுதி, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் . மீனவர்கள் அன்றைய தினம் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் .

காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது புயலாக மாறுமா என்பது குறித்த தகவல்கள் இனி வரும் நாள்களில் வெளியாகும்.

வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைபெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (மே 21) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

No comments:

Post a Comment

Post Top Ad