ஊரடங்கில் தமிழக அரசு தளர்வுகள் அறிவிப்பு: எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, May 23, 2021

ஊரடங்கில் தமிழக அரசு தளர்வுகள் அறிவிப்பு: எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா?

ஊரடங்கில் தமிழக அரசு தளர்வுகள் அறிவிப்பு: எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா?


தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளற்ற தீவிரமான முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ளன.

அதிகாலை முதலே அனைத்து சாலைகளையும் காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இருப்பினும் இந்த ஊரடங்கிலும் சில பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

*பால், குடிநீர், தினசரி விநியோகத்துக்கு அனுமதி

*மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்க அனுமதி

*காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்.

* தலைமைச் செயலகத்திலும் மாவட்டங்களிலும் அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும்.



* தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர் வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

* மின்னணு சேவை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்.

* உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் 12:00 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. சுமொட்டோ, ஸ்விகி போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்.


*பெட்ரோல் டீசல் பங்குகள் வழக்கம்போல் இயங்கும்.

* ஏடிஎம் மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.

*வேளாண் விளைபொருட்கள் மற்றும் இடு பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும். சரக்கு வாகனங்கள் செல்லவும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.

* உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதிக்கப்படும்.

* மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இப்பதிவு தேவையில்லை.


* செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.

தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி அனுமதிக்கப்படும். பணியாளர்கள் இரு சக்கர வாகனத்தில் செல்ல கூடாது. நிறுவனத்திலிருந்து நான்கு சக்கர வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு இ பதிவு செய்து பயணிக்கலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad