வீடு தேடி வருகிறது ஆக்சிஜன் - டெல்லி அரசு அதிரடி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, May 15, 2021

வீடு தேடி வருகிறது ஆக்சிஜன் - டெல்லி அரசு அதிரடி

வீடு தேடி வருகிறது ஆக்சிஜன் - டெல்லி அரசு அதிரடி



டெல்லியில், ஆக்சிஜன் செறிவூட்டல் வங்கி தொடங்கப்பட்டு உள்ளதாகவும், வீட்டு தனிமையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வீடு தேடி சென்று ஆக்சிஜன் வினியோகம் செய்யப்படும் என்றும், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில், கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவியதை அடுத்து, மூன்று வாரங்களாக, முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில், கொரோனா பாசிட்டிவ் விகிதம் 30 சதவீதத்திற்கு மேல் இருந்தது.

இந்நிலையில், முழு ஊரடங்கு காரணமாக, டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் காரணமாக, கொரோனா பாசிட்டிவ் விகிதமும் கணிசமாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், காணொலி காட்சி வாயிலாக, செய்தியாளர்களிடம் ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:
டெல்லியில், கடந்த 24 மணி நேரத்தில், 6,500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 11 சதவீதமாக குறைந்துள்ளது. வெறும் 15 நாட்களில், 1,000 ஐ.சி.யு படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது, டெல்லி மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களின் முயற்சியால் சாத்தியப்படுத்தப்பட்டு உள்ளது. டெல்லி மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad