தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம் யோசனை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, May 24, 2021

தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம் யோசனை!

தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம் யோசனை!



சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களிடமும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்தும் தடுப்பு நடவடிக்கைகள் மருத்துவமனையில் எவ்வாறு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அப்போது அவர் கேட்டறிந்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “தடுப்பூசி போடுவது பற்றி பொது மக்களிடையே மிகப்பெரிய குழப்பம் தயக்கம் உள்ளது. அதனை போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவில் இருந்து காப்பாற்றிக்கொள்ள தடுப்பூசிதான் ஒரே வழி. தடுப்பூசி போடுவதால் எந்தவிதமான விளைவும் ஏற்படுவது கிடையாது. சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது” என்றார்.

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களிடமும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்தும் தடுப்பு நடவடிக்கைகள் மருத்துவமனையில் எவ்வாறு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அப்போது அவர் கேட்டறிந்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “தடுப்பூசி போடுவது பற்றி பொது மக்களிடையே மிகப்பெரிய குழப்பம் தயக்கம் உள்ளது. அதனை போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவில் இருந்து காப்பாற்றிக்கொள்ள தடுப்பூசிதான் ஒரே வழி. தடுப்பூசி போடுவதால் எந்தவிதமான விளைவும் ஏற்படுவது கிடையாது. சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது” என்றார்.

தேசிய கல்வி கொள்கை ஏற்றுக் கொள்ள முடியாதது. பாஜகவை தவிர எந்த கட்சியும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஹிந்தியை வளர்ப்பதற்காக தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

நீட் தேர்வால் கடந்தகாலங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர முடியாத சூழ்நிலை இருந்தது. ஆனால் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதனை நான் வரவேற்கிறேன். ஆனால் நுழைவுத் தேர்வு நடத்தி சேர்க்கை நடைபெற வேண்டுமா அல்லது பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதில் சாதக பாதகங்கள் அதிகம் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக அரசு வருவாயை பெருக்குவதற்கு அரசு லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வரவேண்டும். லாட்டரி சீட்டை அரசே ஏற்று நடத்த வேண்டும். லாட்டரி சீட்டு நடத்துவதால் பல குடும்பங்கள் சீரழிகின்றன என்று விவாதங்கள் வரும். ஆனால் ஆதார் கார்டு வைத்துக்கொண்டு ஒருவருக்கு 10 டிக்கெட் மட்டுமே என்று வரைமுறைப்படுத்த வேண்டும். இதனை விவாதித்து முடிவு எடுக்கலாம். விவாதம் நடத்தினால் தான் எதற்கும் தீர்வு கிடைக்கும். புதுபுது உத்திகளை கையாண்டால் மட்டுமே வருவாயை பெருக்க முடியும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் யோசனைகள் கூறத்தான் செய்வார்கள். விவாதம் செய்தால் மட்டுமே அதற்கு தீர்வு கிடைக்கும் என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad