இது சரிப்பட்டு வராது; கட்டுப்பாடுகளில் புது ட்விஸ்ட் கொடுத்த அரசு!
தைவான் நாட்டில் மொத்தம் 2.4 கோடி பேர் வசித்து வருகின்றனர். இதில் 1,500க்கும் குறைவான நபர்களே கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தனர். இங்கு இதுவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை. சில கட்டுப்பாடுகளால் வைரஸ் பரவலை தடுத்து வந்தனர். இது பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாடர்னா, அஸ்ட்ராஜெனகா ஆகிய நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசிகளை ஆர்டர் செய்து பெற்றுள்ளனர்.
இதில் சிறிய அளவிலான பங்கு மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்களுக்கு செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் அதிகப்படியான தடுப்பூசிகள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் புதிய பாதிப்புகள் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இது சமூகப் பரவலாக மாறியிருக்கிறது.
No comments:
Post a Comment