டவ் தே புயல் எதிரொலி - தடுப்பூசி முகாம்கள் ரத்து - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, May 15, 2021

டவ் தே புயல் எதிரொலி - தடுப்பூசி முகாம்கள் ரத்து

டவ் தே புயல் எதிரொலி - தடுப்பூசி முகாம்கள் ரத்து


டவ் தே புயல் காரணமாக, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்றும், நாளையும் அரசு தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென் கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ் தே என்ற புயல், வரும் 18-ம் தேதி செவ்வாய்க் கிழமை குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்க உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகம், கேரளா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களுக்கு மிக கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. டவ் தே புயல் காரணமாக, கேரளா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் பல்வேறு இடங்களில், கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், டவ் தே புயல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மஹாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில், இன்றும், நாளையும் அரசு தடுப்பூசி போடும் முகாம்கள் ரத்து செய்யப்படுவதாக, பெருநகர மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், கொரோனா சிகிச்சை மையங்களில், தேவையான முன்னேற்பாடுகளை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad