தடுப்பூசி பாஸ்போர்ட் எப்போ வரும்? மத்திய அரசு தகவல்!
கொரோனா இரண்டாம் அலை காரணமாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. எனவே, சர்வதேச விமானப் பயணங்களுக்கு தடை அமலில் இருக்கிறது.
சில நாடுகளில் தடுப்பூசி பாஸ்போர்ட் பயன்பாடு நடைமுறையில் உள்ளது. அதாவது, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்படும். இந்தியாவில் தடுப்பூசி பாஸ்போர்ட் பயன்பாட்டுக்கு வரலாம் என சில தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தடுப்பூசி பாஸ்போர்ட் பற்றி இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் லாவ் அகர்வால், “தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை அனுமதிப்பது பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தற்போதைய சூழலில் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல், மற்ற நாடுகளின் வழிகாட்டல்களின் அடிப்படையில், கொரோனா நெகடிவ் ரிப்போர்ட் இருப்பவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
சர்வதேச அளவிலும், உலக சுகாதார அமைப்புடனும் தடுப்பூசி பாஸ்போர்ட் பற்றி முடிவெடுக்கப்படவில்லை. இதுபற்றி ஒருமித்த முடிவு எடுக்கப்பட்ட பின் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment