இரு மாதங்களுக்கு ரேஷன் இலவசம்: அடுத்து அந்த அறிவிப்பு தானா?
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் எப்போது அமல்படுத்தப்படும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
பாதிப்புகளைப் பொறுத்து மாநில அரசுகளே ஊரடங்கு அறிவிப்புகளை வெளியிட்டுவருகின்றன. பல இடங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூன்றாம்கட்டத்தின் கீழ் 79.88 கோடி பேருக்கு தலா ஐந்து கிலோ உணவு பொருட்களை இரண்டு மாதங்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், தற்போதைய ஒதுக்கீட்டு விகிதத்தின் அடிப்படையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியான, கோதுமை அல்லது அரிசி ஒதுக்கீட்டு அளவை உணவு மற்றும் பொது விநியோகத்துறை தீர்மானிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment