வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேலும் 2 பேரணிகளை நடத்த முடிவு
வேளாண் சட்டத்திற்கு எதிராக மேலும் இரண்டு பேரணிகளை நடத்த முடிவு செய்துள்ளதாக, விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.
மத்திய பா.ஜ.க. அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லியின் எல்லைகளில், கடந்த ஏழு மாதங்களுக்கும் மேல், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக் கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். சட்டத்தை திரும்பப் பெற முடியாது என்றும், தேவைப்பட்டால், சட்டங்களில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.
No comments:
Post a Comment