மேலும் 39 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் டிரான்ஸ்பர்! தமிழக அரசு அதிரடி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, June 14, 2021

மேலும் 39 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் டிரான்ஸ்பர்! தமிழக அரசு அதிரடி

மேலும் 39 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் டிரான்ஸ்பர்! தமிழக அரசு அதிரடி



தமிழகத்தில் மேலும் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை நூற்றுக் கணக்கான அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 50-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும், 39 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இணை செயலாளராக ஜான் லூயிசும், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்த விஜயகார்த்திகேயன், மாநில மனித உரிமை ஆணைய செயலாளராகவும், கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரசாந்த் மு வடநேரே, நிதித் துறை கூடுதல் செயலாளராகவும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா நிர்வாக கூடுதல் ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, மீன்வளம் மற்றும் பால்வளத் துறை இணைச் செயலராகவும், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், சேலம் நிறுவன மேலாண் இயக்குனராகவும், பதிவுத் துறை ஐ.ஜி., சங்கர் தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரிய சி.இ.ஓ., ஆகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மீன்வளத் துறை ஆணையராக கருணாகரன், நில சீர்திருத்தத் துறை இயக்குனராக ஜெயந்தி, வணிக வரித் துறை இணை ஆணையராக கற்பகம், போக்குவரத்து துறை ஆணையராக சந்தோஷ் கே.மிஸ்ரா, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக சுந்தரவள்ளி நியமிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் நலத்துறை சிறப்புச் செயலாளராக ஆபிரகாம், நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த மேக்ராஜ், நகராட்சி நிர்வாக இணை இயக்குனராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad