முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு: வாபஸ் பெற்ற சபாநாயகர் அப்பாவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, June 14, 2021

முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு: வாபஸ் பெற்ற சபாநாயகர் அப்பாவு!

முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு: வாபஸ் பெற்ற சபாநாயகர் அப்பாவு!


கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மீதும், பொது வழங்கல் அரிசி திட்டத்தில் முறைகேடு நடந்ததாக அப்போதைய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் திமுக எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான அப்பாவு புகார் அளித்திருந்தார்.

ஆனால், இந்த இரு புகார்கள் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்காமல், புகார்களை பொதுத்துறை செயலரின் ஒப்புதலுக்கு லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டி, ஆளுநரின் ஒப்புதலை பெற்று வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்த போது, முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான புகார் குறித்து லோக் ஆயுக்தா விசாரணைக்கு அனுப்பியுள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான புகாரை விரிவாக விசாரித்த தலைமை செயலாளர் புகாரில் அடிப்படை முகாந்திரம் ஏதும் இல்லை என முடிவெடுத்து புகாரை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சபாநாயகராக தேர்வாகியுள்ள அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்குகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தார். இதனையடுத்து, இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad